கவிதைமணி

நீர் வற்றிய குளம்: -வலங்கைமான் நூர்தீன்

கவிதைமணி

குறவைகளும், கெளுத்திகளும்,
கெண்டைகளும், விரால்களும்
துள்ளிக்குதித்து நீந்திக்கொண்டிருந்த குளம்.

கிராமத்திலிருந்து நகரமாகிக்கொண்டிருந்த
அவ்வூரின் கழிவு நீர் சேமிப்பு தொட்டியாகி
பல வருடங்களுக்கு முன்பே
நோய் தொற்றுகளால் அழிந்துவிட்டன
மீன்களும் நீர் வாழ் உயிர்களும்.

படிப்படியாக நெகிழி குப்பைகளால் நிரப்பப்பட்டு
அரசியலால் ஆக்கிரமிக்கப்பட்ட
அவ்விடத்தில் தான் உயர்ந்து நிற்கிறது
பல தளங்களை கொண்ட அடுக்ககம்.

பத்தாவது தளத்தில் பளிங்கு தரையோடு
சொகுசாக கட்டப்பட்டுள்ளது
நீல நிறத்தில் நீச்சல் குளம்.

சரும நோய்களை உண்டாக்கக்கூடிய
ரசாயன கலவை தண்ணீரில்
பெரும் கட்டணம் செலுத்தி
மீன்களைப்போலவே
நீந்திக்கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT