கவிதைமணி

ஒற்றைச் சிறகோடு:  கவிஞர் " இளவல் " ஹரிஹரன்

கவிதைமணி

ஒற்றைச் சிறகோடு
உயிர்வாதையுற்று
பறக்கும் புள் நான்....

விரிந்து கொண்டேயிருக்கும்
வானம்.
அடிமைப்படுத்த நினைத்து
சிறகை வெட்டிவிட்ட
கள்ளத்தனம்....

கூண்டுக்குள் அடைக்கும்
முயற்சியில் தோற்றதால்
தப்பிவிட்ட ஒற்றைச் சிறகு.
ஆகாயம் முழுதும்
அளக்க நினைக்க எண்ணும்
சிறுபறவைக்குக் கூடுமோ
செயலில் வெற்றி..

வெட்டிவிட்டதால்
கிளைகள் ஏதுமின்றி
நெட்டை நெடுமரம்
பட்டுப் போன நிலையில்

எங்கே அமர்ந்து
எப்போது ஓய்வெடுக்கும்
இந்தச் சிறுபுள்....
எப்படித் தன்
ஒற்றைச் சிறகை
கோதிக்கொள்ளும் அலகால்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT