கவிதைமணி

ஒற்றைச் சிறகோடு ! கவிஞர் இரா .இரவி

கவிதைமணி

ஒற்றைச் சிறகோடும் பறக்க முடியும் 
உள்ளத்தில் தன்னம்பிக்கை உரம் வேண்டும் !

இரு சிறகால் பறப்பது என்பது இயல்பு 
இரண்டில் ஒன்றை இழந்தும் பறப்பது சிறப்பு !

முயற்சி பயிற்சி செய்தால் போதும் 
முன்னோக்கிப் பறக்கலாம் சிறக்கலாம் !

பயன்படாது ஒற்றைச் சிறகு எதற்கு 
பாரமென வருந்தினால் பறக்க முடியாது !

ஒற்றைச் சிறகென வருந்துவது விடுத்து
ஓங்கிப் பறக்க முயன்றிட வேண்டும் !

முடியுமா ? என்று தயங்குவது விடுத்து 
முடியும் என்றே பறந்திட வேண்டும் !

மற்றவர்களால் வாங்க முடியாத பதக்கம் 
மாற்றுத் திறனாளி மாரியப்பன் வாங்கினான் !

காலில் குறை என்று முடங்கவில்லை 
காலை முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தினான் !

தலை வழுக்கை என்பதற்காக வருந்திய 
தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்அவர்கள் !

மீசையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டார் 
மீசைக்காரர் என்றே எல்லோரும் அழைத்தனர் !

வாழ்வியல் தத்துவம் என்று விளக்கினார் 
வியந்து விட்டேன் விளக்கம் கேட்டு !

இழந்ததற்காக வருந்துவதை விட்டு விட்டு 
இருப்பதைச் செம்மையாக்குவது சிறப்பு !

ஒற்றைச் சிறகு போனால் போகட்டும் 
மற்றொன்றுக்கு மகிழ்ச்சி கொள்வோம் !

ஒற்றைச் சிறகோடும் உயரம் செல்லலாம் 
உள்ளத்தில் ஒளி பிறந்தால் வழி பிறக்கும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT