கவிதைமணி

ஒற்றைச் சிறகோடு: அ.வேளாங்கண்ணிம்

கவிதைமணி
சின்னஞ்சிறு கோடாய் பறந்து திரிந்த கூட்டம்தங்கள் சிறுகூட்டில் கொஞ்சிக் கிடந்த கூட்டம்துன்பம் வரும்போது சேர்ந்து எதிர்த்தக் கூட்டம்இன்றோ வாடும்படியாய் என்ன நடந்தது கூறீர்?உயரம் கண்டு பயம் கொண்டது இல்லைதுயரம் கண்டு துயர் கொண்டது இல்லைசிகரம் தொடவும் துணிந்து சென்றது உண்டுமரங்கள் ஏதுமின்றி எங்கள் வாழ்வு இல்லைசிறகு இருக்க வானம் தொட்டே விளையாடுவோம்ஓரிறகு விழுந்தாலும் கவலை விட்டே சதிராடுவோம்விறகுத் தேவைக்கு காய்ந்ததை எடுத்த காலம்போய்வியாபாரத் தேவைக்கு மரங்கள் வெட்ட அதிர்ச்சியானோம்நாட்டுக்குள் கடப்பாரை தீட்டியவரை கூட தவறுதான்காட்டுக்குள் இருப்போரை தீண்டினால் என்ன செய்வதுஎங்களது மறுசிறகான மரங்கள் குறையக் குறைய‌ஒற்றைச் சிறகு வெட்டப்பட்டதாகவே உணர்ந்து கொள்கிறோம்இந்த ஒற்றைச் சிறகு கொண்டு பறப்பதெப்படிமரமே இல்லா உலகமென்ற நினைவே தப்படிகரத்தில் அரிவாள் விட்டு விதைகள் தொட்டால்தரத்தில் உயர்வான் மனிதன் செவி சாய்ப்பானா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT