கவிதைமணி

ஒற்றைச் சிறகோடு: கோவை.நா.கி.பிரசாத்

கவிதைமணி

ஒற்றைச்சிறகிழந்த
அந்தப் பறவை...
வெட்டும் மரத்தை
சுற்றி சுற்றி வருகிறது!
அய்யகோ பசியோடு
கூட்டில் குஞ்சுகள்!

நடைப்பிணமாய்
சிறைபட்ட கிளி !
வானம் பார்த்த
கண்களுக்குள்
வாழ்க்கை கனவுகள்!

ஓட்டுவீடுகளின் மரணம்
கூடெனும் சிறகிழந்து
குடும்பம் நடத்தமுடியாமலேயே
சுவரில் மோதியே சவமாகிறது!

தண்ணீர் சிறகு
தனலாய் தகிக்க
வெயிலில் வெந்தே
சொட்டுஈரமின்றி
எட்டு எடுத்து வைக்காமலேயே
உயிர் உலர்ந்துகிடக்குது!

சிகரம் தொட
சிறகை விரித்ததும்
அன்று வேடனின் அம்பு
இறகை முறித்தது!

இன்று...
இயந்திர டவரும்
மனிதத் தவரும்
உலக உறவையே
பறிக்கிறது!

மனிதா...
நீ மட்டும்
உருட்டி விளையாட
உனக்கான
கால் பந்தல்ல பூமி!

உயிரினங்கள் அனைத்தும்
திரண்டு திளைத்திடும்
முழுப்பந்துடா!

இயற்கையின் இறகுகளை
ஒவ்வொன்றாய் பிடுங்கி
எங்கே உயரப்பறக்க நினைக்கிறாய் நீ!?

நினைவில் வை....
புழுவிலிருந்து
புறப்பட்டவன்தான் நீ!

அனைத்தையும் புறகணித்து
ராட்ஷச சுயத்தோடு
ரகசியமாய் திரிந்தால்
உனது வாழ்க்கைச்சிறகுகளும் 
பொசுங்கிவிடும்

பின் புழுக்களும்
உன் பிணத்தை உண்ணாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT