முகப்பு
கவிதைமணி

நீ கண் சிமிட்டினால்: சர்வோ சீனிவாசன் 

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:25 PM
பகிர்:

அங்கங்கள் ஐந்தாம் 
ஆண்டவன் படைப்பினிலே 
திறன்கள் ஐந்தும்
தேவையன்றோ உயிரினங்களுக்கே !
கண்ணுக்கு மட்டும் 
கதவினை ஏன் படைத்தான்?
இதயத்தின் துடிப்பினைப்போல் 
ஏன் மூடி திறக்கின்றாய் ?
ஆயிரம் வரிகள் கூறா காவியத்தை 
ஒரு கண் சிமிட்டல் கூறுமாமே!
பிறந்த சிசுவின் அழகே 
அந்த கண்சிட்டலன்றோ! 
தாயும் சேயும் பேசுவதே 
கண்சிமிட்டலில் தானே!
காதலும் காமமும் 
பல்லாங்குழி ஆடுமாமே 
ஒரு கண்சிமிட்டையில் !
ஆயிரமாயிரம் பாஷைகள் 
ஆயினும் கண் இமை சிமிட்டும் 
பாஷை காவியம் படைக்குமன்றோ!
கண்ணும் இமையும் காட்டிய 
வித்தையன்றோ உலகத்தையே 
பன்முறை பார்க்க தூண்டியது!

முழு கட்டுரையைப் படிக்க →