முகப்பு
கவிதைமணி

 நீ கண் சிமிட்டினால்: பொன்.இராம்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:25 PM
பகிர்:

மழலைப் பருவத் தொட்டிலில்
அம்புலிப் பருவக் கண் சிமிட்டலில்
உறவுகளின் ஆனந்தக் களிப்பு!

எச்சிலில் இனித்த பண்டங்கள்
மிச்சமாய் தந்தையின்
வயிற்றுக்கு ஆனந்த உணவு!

கை தொட்டு பலகையில்
எழுதும்போது நீ
சிமிட்டிய கண்சிமிட்டலில்
தாயின் ஆனந்த சிரிப்பு!

உள்ளாடை தெரிய
இழுத்து மறைத்த
குட்டை பாவாடையின்
பரிகசிப்பு உன் வளைவுகளின்
கண்சிமிட்டலில்
ஒளிந்து கொண்டன!

பெண்ணே! மங்கைப்பருவம்
முழுதும்தான் தங்கமென
தரணி எங்கும் உறவுகள்
பெருமை பேச
நீ சிமிட்டும் அங்க அசைவு
அநாகரிக சிமிட்டலில்
உடல் அழகு என்றும் நிரந்தரமல்ல
என்றே நீயும் உணர்ந்திடு!

காமுகப் பேய்கள் கண்டபடி
உலா வரும் போதினில்
எட்டி நின்றே சென்றிடு!
உன் மானம் காக்க
என்றும் நீ தயங்காதே! 

கட்டான உடல் அழகை
காமுகர்கள் கண்டு ரசிக்க
கிட்டவே வந்திட்டால்
கீறிடவே ஆயுதங்கள்
குறைவின்றி கொணர்ந்திடுவாய்!

படுக்கையறைப் பதுமையாய்
ஆணுக்கிங்கே  இணையாக
போராடவல்ல உனது பிறப்பு!

திருமண வாழ்வெனும்
தோணியிலே வாழ்க்கைக் கடலில்
விளையாடி செயிக்கும்
உன்னதக் குடும்ப வாரிதியாய்
உருவாகி விடு!
உன் கல்விக் கண் சிமிட்டலில்
உலக அரங்கில் உன் பார்வை
பதிந்திடவே உறவுகள்
உன்னை வாழ்த்திடவே
பன்முகப் பார்வையில்
பவனி வந்திட நூல்
பல படைத்திடு!
 

முழு கட்டுரையைப் படிக்க →