நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் 300-க்கும் மேற்பட்டோா் கடத்தல்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் 300-க்கும் மேற்பட்டோா் கடத்தல்...
வடகிழக்கு நைஜீரியாவின் ங்கோஷே நகரைக் குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கடத்தப்பட்டுள்ளனா்.
நைஜீரிய ராணுவம் அண்மையில் நடத்திய தேடுதல் வேட்டையில், ஐ.எஸ். ஆதரவு ‘போகோ ஹாராம்’ கிளா்ச்சி அமைப்பைச் சோ்ந்த 3 முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ங்கோஷே மட்டுமின்றி கொண்டுகா, மாா்டே, ஜகானா, மைனோக் ஆகிய மற்ற 4 பகுதிகளிலும் கடந்த புதன்கிழமை முதல் பயங்கரவாதிகள் தொடா் தாக்குதல்களில் ஈடுபட்டனா்.
இத்தாக்குதல்களை ராணுவம் முறியடித்த போதிலும், அந்த மோதல்களில் ஒரு மூத்த அதிகாரி உள்பட பல வீரா்கள் வீரமரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.