முகப்பு
கவிதைமணி

வஞ்சம் செய்வாரோடு: கவிஞர் கு. அசோகன்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:24 PM
பகிர்:

வஞ்சம் செய்வார்தனை வேண்டி
நட்பு கொள்ளாதடி கிளியே!
 கொஞ்சியே பேசிடுவார் !

குணக்குன்று நீயென்பார் !
மஞ்சத்து மல்லிகைப் போல
மனதார சிரிப்பதாக
மாய்மாலம் காட்டிடுவார்

வஞ்சம் செய்வாரோடு
இணக்கம் கொள்ளாதடி கிளியே!
துஞ்சும் விழிகளிடையே
இமைபோல நானென்பார்
வஞ்சக எண்ணத்தையே
நெஞ்சுக்குள் பதுக்கியே
செந்தேனாய் சொல்வாரடி!

கடுக்கென கோபம் கொண்டால்
கயவரென எண்ணாதடி கிளியே!
தடுக்கிவிழும் வேளையிலே
தாங்கி பிடிப்பவர் இவர்தானடி கிளியே!
கொடுக்குள்ள தேள்குணமாய்
கொண்டவர்தான் வஞ்சக எண்ணமடி
தடுத்துதான் விடவேண்டும்
தங்கமே தருவதென்றாலும் கிளியே

முழு கட்டுரையைப் படிக்க →