முகப்பு
கவிதைமணி

தனிமையோடு பேசுங்கள்: பி.பிரசாத்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:24 PM
பகிர்:

"என் மகன்கள் என் மகள்கள்
நல் வாழ்வு காணவேண்டும் !"
அன்னை மனம் தனிமையிலும்
பேசும் மொழி இதுவாகும் !

"எந்த வித நிலைதனிலும்
நிதி நிலமை சீர்வேண்டும் !"
தந்தை மனம் தனிமையிலும்
வேண்டும் நிலை இதுவாகும் !

"வணிக மதில் பெருவகையாய்
பொருள் ஈட்டும் திறன்வேண்டும் !"
தனிமையிலும் வணிகர் மனம்
வேண்டும் வரம் இதுவாகும் !

தனிமையிலே பேசுவது என்றாலே
தன்னோடு தான்பேசும் நிலைதானே !
தனிமையிலே பேசும் போதும்
தன்னுடனே நீவேண்டும்
எனவேண்டும் எப்போதும்..
காதலரின் மனம் தானே !

முழு கட்டுரையைப் படிக்க →