மழை இரவு
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM
குளிர் தோய்ந்த மழை இரவொன்றின் ஈரப் பொழுதில்
சாத்திய சன்னல் இடுக்கில் நுழைந்த
பனிக்காற்றாய் என் இதயம் தொட்டு, மனதை நனைத்தாய்
ஒரு விபத்திற்கு பின்
எல்லாம் மறந்தவனாய் ஆனேன்
உன்னைத் தவிர..
ஒரு நீண்ட ரயில் பயணத்தின்
சக பயணியாய் நன்கு பழகி
உண்டு, விளையாடி, சிரித்து மகிழ்ந்து
கதை பல கூறி, நிறுத்தம் வர,
பெயர் கூட தெரிவிக்காமல்,
உடமையுடன் இறங்கிச் செல்பவளாய்,
நீயும் இடம் பெயர்ந்தாய்
முன் அறிவிப்பேதுமின்றி
எப்போதோ திரும்ப நிகழவிருக்கும்
நம் சந்திப்பிற்காக நம்பிக்கையுடன்
மணம் மறுத்து காத்திருக்கிறேன்!
- செந்தில்குமார் சுப்பிரமணியன்