முகப்பு
கவிதைமணி

மழை இரவு

Updated On : 17 ஜூலை, 2018 at 5:02 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM

மழை காலம் ஒருநாள், 
மழை இரவு இருட்டு சூழல்
மழைச் சாரலுடன் 
முற்று பெறாத கதையுடன் தாத்தா!
மழையாகி இங்கே, 
கதைசொல்லியாக வந்தார்
மழை பேசினது ! 
ஆம்! தாத்தா தான் பேசினார் மழையாக!
மழை நான்! எனக்கு 
பெற்றோர் உண்டு, கதிரவன்-கடலன்னை
மழைக்கு காதலன் உண்டு, 
குளிர் காற்றே நாயகனாவான்!
கதிரவன் தன்வெப்பக் கதிர்களாலே 
கடல் அன்னையை கட்டிதழுவு வான்
அதிலெழும் வெப்பத்தால் 
ஆவியாகி நீர் மேகமாய் 
கருக்கொண்டு மாறும்
காற்றெனும் காதலன் 
தன் கருணை காட்ட 
கார்மழையென பொழிகிறேன்  
ஆற்று வெள்ளமாய் அவதரிப்பேன்! 
அகிலம் தழைத்திட வழிவகுப்பேன்!
ஊற்றாய்க் கூட உதயமாகி நிற்பேன்!
ஓங்கி அருவியாய் சிரித்திடுவேன்!  
என்னால் மக்களுக்கு ஜல மின்சாரம் 
எடுக்க அருவியாய் உதவுவேன்
சீற்றத்தால் அழிவு 
சில சமயம் வெள்ளமாய் 
உருவெடுத்து பாயும்போது
கைமாறு கருதாமல் உதவுவேன், 
நீங்களும் உதவுங்கள் என்போல்!
கதைசொல்லி கதை முடித்தார், 
காது கொடுத்து கேட்டோம்,களித்தோம்
கும்மிருட்டு, தாத்தா விடைபேற்றார்,
கொட்டியது மழை! குதூகலித்தோம்!

- கவிஞர் .அரங்க.கோவிந்தராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.