மழை இரவு
எத்தனையோ இரவுகள் வந்து
போகும் ஆனாலும் சிறப்பு அழகு
மழை இரவு நீங்காத சிதறல் ஓசை
மனதை தட்டி எழுப்பும் இசை
கவிதைகளும் இயற்கை கனவு
அதில் எழும் எழுச்சி இன்பம்
காதில் விழும் நீரோசை காண
கண்கோடி வேண்டும் இசை இரவு
இடியின் இசை மின்னலின்
வெட்டல் வேகம் இருட்டின் அழகு
ஓயாமல் பெய்யும் மழை ரசிக்க
மழை இரவு இயற்கையின் வரம்
Advertisement
இருண்டு கிடக்கும் வானில் புது
தோற்றம் நொடி மறைவு மின்னல்
அதன் தாக்கம் ஒரு இடிசத்தம்
மழை இரவு மெளனம் ஜொலிப்பு
குழந்தைகள் ஆனந்தம் துடிப்பு
எதிர்பார்ப்பு வேடிக்கை மகிழ்ச்சி
குதூகல கொண்டாட்டம் மழை
இரவு மனதின் இன்ப நிறைவு
எத்தனை இரவுகளிலும் மனமது
மறக்காத இரவு முதல் இரவும்
மழை இரவும் மட்டுமே துளிர்
விடும் சிந்தனை புதுமகிழ்ச்சியே
நினைவுகளை கடந்த கால
வாழ்க்கையை அசை போட
மனம் அதில் திளைக்க உகந்த
காலம் என்றும் மழை இரவே
தூய மண்வாசனையை நுகர
இயற்கையின் வர்ண ஜாலத்தை
ரசிக்க ஒரே ஒரு மழை இரவு
போதாது தொடரட்டும் நல்லிரவு
- சீர்காழி .ஆர்.சீதாராமன்