முகப்பு
கவிதைமணி

மழை இரவு

Updated On : 17 ஜூலை, 2018 at 5:05 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM

எத்தனையோ இரவுகள் வந்து 
போகும் ஆனாலும் சிறப்பு அழகு
மழை இரவு நீங்காத சிதறல் ஓசை
மனதை தட்டி எழுப்பும் இசை

கவிதைகளும் இயற்கை கனவு
அதில் எழும் எழுச்சி இன்பம்
காதில் விழும் நீரோசை காண
கண்கோடி வேண்டும் இசை இரவு 

இடியின் இசை மின்னலின்
வெட்டல் வேகம் இருட்டின் அழகு
ஓயாமல் பெய்யும் மழை ரசிக்க
மழை இரவு இயற்கையின் வரம்

Advertisement

இருண்டு கிடக்கும் வானில் புது
தோற்றம் நொடி மறைவு மின்னல்
அதன் தாக்கம் ஒரு  இடிசத்தம் 
மழை இரவு மெளனம் ஜொலிப்பு

குழந்தைகள் ஆனந்தம் துடிப்பு
எதிர்பார்ப்பு வேடிக்கை மகிழ்ச்சி
குதூகல கொண்டாட்டம்  மழை
இரவு மனதின் இன்ப நிறைவு 

எத்தனை இரவுகளிலும் மனமது
மறக்காத இரவு முதல் இரவும்
மழை  இரவும்   மட்டுமே  துளிர் 
விடும் சிந்தனை புதுமகிழ்ச்சியே

நினைவுகளை கடந்த கால 
வாழ்க்கையை அசை போட
மனம் அதில் திளைக்க உகந்த
காலம் என்றும் மழை இரவே
 
தூய மண்வாசனையை  நுகர 
இயற்கையின் வர்ண ஜாலத்தை
ரசிக்க ஒரே ஒரு மழை இரவு
போதாது தொடரட்டும் நல்லிரவு

- சீர்காழி .ஆர்.சீதாராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.