மழை இரவு
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM
மழை......இது பெய்யாவிடில்
தழைக்காதே ஞாலம்!
உழைக்கும் வர்கம்
அயர்ந்து உறங்கும்
இரவு நேரத்தில்
"சோ" என இரைச்சலுடன்
பெய்யும் மழை
அவர்களுக்கு தாலாட்டு!
அடித்து பெய்த
இரவு மழையில்
பள்ளங்களில் நீர் நிறைய
உள்ளம் கேட்கும் அந்த
நீரில் இருக்கும் தவளை
செய்யும் சப்தம்!
உயிர் வாழ நீர் தேவை
அது பொழிவது இரவானால்
அதையும் ரசிப்பவர்
மகிழ்ச்சியில் சொல்வது
"மழை இரவு"
- உஷாமுத்துராமன், திருநகர்