கவிதைமணி

மழை இரவு

கவிதைமணி

அந்தி சாயும் அந்நேரம்.. 
ஆதவன் மறையும் அந்நேரம்…
அந்தி மலர்கள் முகிழ்ந்ததுவே.. 
கார்முகில் ஒன்றாய்த் திரண்டதுவே…
பெருமழை சோவெனக் கொட்டியது.. 
புதுவெள்ளம் பெருக்கெடுத் தோடியது…
இருளைக் கிழித்த மின்னலுமே.. 
பளிச்சென வானில் மின்னியது…!

பேரிடி பலவும் முழங்கியது.. 
காரிருள் எங்கும் அப்பியது…
பருத்துப் பெருத்த மரங்களெல்லாம்... 
பேயெனக் காற்றில் ஆடியது…
இம்மழை அனைவர்க்கும் மகிழ்வெனினும்.. 
இன்னலுற்றோரும் சிலர் உண்டு…
இடிவிழுந் தெரிந்த குடிசையிலே.. 
இன்னுயி ரொன்று பறிபோனது…!

சூரைக் காற்றின் வேகத்தில்… 
கூரைகள் பெயர்ந்துப் பறந்ததனால்…
குடிசையில் வாழும் மக்களுக்கு.. 
உறக்கம் தொலைந்த இரவானது…
இயற்கையை வெல்லும் ஆற்றலெல்லாம்..  
இல்லை நமக்கு என்றாலும்…
இன்ன லுற்றோர் அனைவருக்கும்.. 
இருகரம் கொடுத்து உதவிடுவோம்…!

-ஆ. செந்தில் குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT