அதிகாலை மழை செய்யுள்
அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்
காலை மழை மரபுக் கவிதை
படித்தவர்களுக்கு மட்டுமே புரியும்
வானவில்லோடு வரும் மதிய மழை ஹைகூ
புரியாதவர்களையும் ரசிக்க வைக்கும்
முன் இரவு மழை நவீன கவிதை
உற்று கவனித்த பின்னரே ரசிக்க வைக்கும்
செய்யுள் மரபு புதுமை நவீனம் ஹைகூ
எல்லாம் கலந்திருக்கும் இரவு மழை
மழை இரவாக மாற்றம் காணும் காப்பியமாகும்!
-கே.ஆர்.கார்த்திகா, திருப்பத்தூர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.