வாழ்க்கையெனும் போர்க்களம்: ரா. பார்த்தசாரதி
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:42 PM
உண்மையைச் சொன்னவனை உலகம் வெறுக்குமடா உதவி செய்ய நினைத்தால் உள்ளத்தைப் பறிக்குமடா !உள்ளத்தை கல்லாக்கி ஏழை போல் வாழ்ந்துவிட்டால் வாழ்க்கை என்றும் போர்களமாய் என்றும் மாறாதடா !இரக்கம் கொண்டவனை உலகம் எதிரி என சொல்லுதடா இல்லாதவன் ஏங்கும் நிலையில் எட்டி உதைக்குதடா !உலகில் மரதுன்பமுற்று ணத்தில் மட்டும் உயர்வு தாழ்வு இல்லை இறைவன் இதற்கு மட்டும் வைத்தான் எல்லை !எந்த கடவுளுக்கும் காது கேட்கலே, ஏழையை எட்டிப்பார்க்கலே வாழ்ந்தாலும், இறந்தாலும் ஏன் என்று கேட்க ஆள் இல்லே !இன்பத்தை தேடித் தேடி ஏழை நெஞ்சம் ஏங்குது அன்பிலார் வீட்டில் அது ரொம்ப நாளா தூங்குது வாழ்க்கை எல்லாம் துன்பமுற்று,மற்றவர் ஏமாற்றும்போது எங்கே முன்னேற்றம் மனித வாழ்க்கையில் என கேட்க தோணுது !வாழ்க்கை ஓர் போர்க்களம், ஒவ்வொரு வீட்டிலும் அமர்க்களம் வியர்வை சிந்தி பாடுபட்டாலும், ஏழையாய் சாவதே விதியாகும் !விதியை என்றும் மதியால் எதிர்கொண்டு வென்றிடலாம் ஒற்றுமை எனும் ஆயுதத்தை கையில் ஏந்திடலாம் அடக்குபவனை ஒன்றாய்க் கூடி எதிர்த்திடலாம் வாழ்க்கை எனும் போர்க்களத்தில் வெற்றிவாகை சூட்டிடலாம் !