கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

கவிதைமணி

அரசனாய்ப்பிறந்து
துறவியுடன் வளர்ந்தான்--
கலைகள் அறுபத்தி நான்கினையும்
கசக்கிப்பருகினான்.

கலைமகளுக்கே பொறாமை –
வில்லை, விஷ்ணுவின் வில்லை
முறித்தால் தான் உண்டு –
ஜனகனின் தேர்வில் முதலிடம்..
கைக்குள் விழுந்தாள்
பூமியின் மகள் –

சின்னத்தாயின்
எண்ணக்கசிவுகளைத்
துடைக்க
வனத்துறையின்
வரவேற்பை ஏற்றான் –

இவனின் இனியவள்
இலங்கை அரசனிற்கு
இலக்கா ?

இலகுவாய் விழுந்தான்
மானின் மாயையில்—
குரங்கு இல்லையென்றால்
குணாளன் இல்லை –
அனுமனின் அறிவால்

உயிருடன் ஒரு குடும்பம் –
சேது ,
நிஜக்கடலிற்கா,
கஷ்டக்கடலிற்கா,
தாண்டி தான் வீழ்த்தினான்
பத்து தலை பித்தனை –
மீட்டான்,  
மிதிலையின் மின்மினியை—
கடவுளின் வாழ்க்கைக்கயிறே
துன்பச்சிக்கலில் –
மனிதனிற்கு ?

நான் மட்டும் இந்த
வாழ்க்கை ப்போர்க்களத்தில்
கவலையின்றி — எப்படி ?
என் அறிவுக்கண்ணன்
எனக்காக தன்னம்பிக்கை கீதையை
தொடர்ந்து போதித்த வண்ணம் --

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT