முன்னோர்கள் அனுபவித்தார்கள்முதலாம் உலகப்போர் ரத்த வெள்ளத்தைஇரண்டாம் உலகப்போர் கொலைபீடத்தைநிமிடம்தோறும் அனுபவிக்கிறோம்நிகழ்கால வாழ்க்கையில்.மூன்றாம் உலகப் போரின்முன்மாதிரியைசொர்க்கம் போகவே ஆசைசொக்கநாதனிடம் வேண்டுகிறார்கள்அப்படியானால்நாம்வாழும் வாழ்க்கைநரகம்தானேலஞ்சம் வஞ்சம் ஆடம்பரம்மோசடி ஜாலம் கொடுந்தந்திரம்இவையே வாழ்வென்றால்...எதிர்கொள்வது போர்க்களம்தானே...அடுத்த வீட்டில்ஒப்பாரி பாடக் காரணமாகிவிட்டுத்தன்வீட்டில்தாலாட்டுப் பாடவே விரும்புகிறார்கள்எல்லாரும் காந்தியாய் மாறுவது எப்போது?இந்த வாழ்க்கை, பூவனமாய் மாறும் அப்போது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.