வாழ்க்கையெனும் போர்க்களம்: கே.ஆர். கார்த்திகா
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:42 PM
விருத்தியாவது விதையாவது
முளைப்பது கிளைப்பது
காய்ப்பது கனிவது
உதிர்வது விழுவது -வரை
வழியெங்கும் போர்க்களம் காணும்
மரம், செடி,கொடி யாவும்
பூக்கோலம் தருகிறது நமக்கு!
இயற்கைகோடு வாழ்ந்தால்
பூகோளத்தில் நாம் வாழும்
போர்க்கள வாழ்க்கை
பூக்கள வாழ்க்கையாகும் !