கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்:  பெருமழை விஜய்

கவிதைமணி
வாழ்க்கை யெனும் போர்க்களத்தில்வந்து  குதித்து  விட்டோம்!போர்க்கள மென்றாகி விட்டால்போரிட்டுத் தானாக வேண்டும்!போர்  என்று  சொன்னாலேஆயுதத்தை ஏந்த வேண்டும்!ஆயுதங்கள்  இங்கு  பலஅபரிமிதமாய் நமக் குண்டு!அன்பை ஆயுத மாக்கிஅமைதியாய் இங்கு வாழ்ந்திடலாம்!பண்புடனே நாம் வாழ்ந்தால்பல்வகையில் மகிழ்ந் திடலாம்!பொறுமை கொண்டு வாழ்ந்தால்பூவுலகே சொர்க்க மாகும்!நாணத்துடனே நாம் வாழ்ந்தால்நல்லதே செய்தி டுவோம்!இனிமையாய் நாம் பேசிஇன்பம் மிக வடையலாம்!கண்ணியம் காத்து வந்தால்காற்றும் நம்மை மதித்திடும்!வாழ்க்கையைனும் போர்க் களத்தில்வாழ்வாங்கு நாம் வாழ்வதற்குநாம் எடுக்கும் ஆயுதமேநம்விதியை நிர்ண யிக்கும்!அன்பையே ஆயுத மாய் அனைவரும் கை யெடுப்போம்!அரிதான பிறவி யிதை அன்பு மயமாக்கி மகிழ்வோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT