கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்: பெருவை பார்த்தசாரதி

கவிதைமணி
அரசியலில் அடிக்கடி வரும் நெருக்கடிபோல்       அவ்வப்போது துன்பம் வரலாம் நம்வாழ்வில்.!இரக்கமற்ற செயல்களைச் செயும் சழக்கரால்     இயல்பான வாழ்க்கையில் இடர் வந்துசேரும்.!சிரமமின்றி சீராகநம் வாழ்க்கை செல்தற்கே     சித்தர்கள் சிந்தைபுக பலநல் வழிசொன்னார்.!வரவேற்று வகையாயதை மனதில் ஏற்றினால்    வாழ்க்கை யெனும் போர்க்களம் இனிக்கும்.! வாழ்வில் துன்பங்கள் நெருங்கும் போதிலே     வாழ்வு குறுக்கிய நல்லதங்காள்களும் உளர்.!வாழ்வு முழுதும் துன்பமே நிறைந்த போது     வாழ்ந்து காட்டிய இராமர்களும் உள்ளனர்.!வாழ்வே சூனியத்தால் சூழ்ந்த போதிலும்     வழிகாட்டினர் பாண்டவர்கள் நம் வாழ்வில்.!வாழ்க்கை என்பதே ஒரு போர்க்களமதில்     வாழப் பழகுவதே இப்பிறவியின் நோக்கம்.! அயலான் நம்மையாட் கொண்ட போதிலே    அன்று நாமடைந்த துயரத்திற்கு அளவேது.!கயவர்கள் செயும் கலவரத்தால் சிலசமயம்     கால முழுதும் கலங்குகிறோம் கண்ணீரால்.!இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நமது     இல் வாழ்விலெங்கோ இடிக்கிறது இடையூறு.!வியர்வை சிந்தியுழைக்கும் எண்ணம் வரின்     வெல்லலாம் வாழ்வெனும் போர்க் களத்தை.!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT