வெல்லும் சொல்: கவி.செங்குட்டுவன்
Updated On : 30 ஜனவரி, 2024 at 7:05 PM
வெல்லும் சொல்லென்று உலகில் வேண்டுமோஉண்மை உழைப்பாளிக்கு என்றும் இங்கேஉறக்கம் துறந்தே இன்றும் என்றும்ஊருக்கு உழைப்பதே உயரிய சொல்லாகும்……வாழ்க்கையில் இல்லை என்ற சொல்லையேதொல்லை எனவே கருதிடும் நிலையைஎன்றும் உணர்ந்திடும் உயரிய பண்பைஉலகுக்கு காட்டுவதே உயரிய சொல்லாகும்……உதவிக்கு ஏங்கிடும் ஏழைகள் பலரும்உலவிடும் உலகமதில் உலாவும் வருகிறோம்உண்மையாய்த் தேவைப் படுவோர்க்கே நாமும்உதவிடும் மனம்தான் உயரிய சொல்லாகும்…….கல்லாமை என்னும் இருளை நாட்டில்இல்லாமை ஆக்கிடும் வகையில் நாமும்செய்திடும் பயணமும் ஆற்றிடும் செயலும்சொல்லிடும் என்றும் உயரிய சொல்லாய்…….நாளைய உலகின் நாயகன் நாமென்றுநாளும் உணர்ந்தே செயலாற்றி வந்தால்நல்லதோர் உலகமதை உருவாக்கும் சிற்பியாவோம்என்னும் சிந்தனையே உயரிய சொல்லாகும்