கவிதைமணி

வெல்லும் சொல்; ரா.பார்த்தசாரதி 

கவிதைமணி

பழகும் விதத்தில் பழகினால் பகைவனும் நண்பனே 
சொல்லும் விதத்தில் சொன்னால் தலையாட்டுவானே
பேசும் பேச்சும்,சொல்லில் நயமும் நம்மை உயர்த்திடுமே 

பிறர் விரும்பும்  சொல்லைக் கூறினாலே புகழுண்டாகுமே!
சொல்வன்மை என்றாலே சொல்லை திறம்பட கூறுபவனே 
பிறர்மனம் நோகாமல் சொல்லை சொல்பவன் நல்லவனே 
இனிய சொற்கள் இருக்கும்போது தீச்சொல் கூறுவானேன் 
பழமாக இனிய சொல்லிருக்க, காயை சாப்பிடுவது தீமைதானே !

அவையறிந்து சொல்லைச் சொல்பவன்  அறிவுடையவன் ஆவான் 
தவறான சொல்லை சொல்பவனே  முட்டாள் எனப்படுவான் 
சொல்லாற்றல்  மனிதனை  என்றும் மண்டியிடச் செய்யாது 
எவர் எதிர்த்து வரினும்  அவர் எதிரில் தலை வணங்காது !

சொன்னதை எல்லாமே  உடனே  செய்துவிட  முடியுமா 
காலம் கருதி, உரிய சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டாமா 
பழி  பாவங்கள் வராமல் பார்த்து எடுத்துரைக்கவேண்டாமா 
நியாத்தை  நினைந்து  உண்மையை நிலைநாட்டவேண்டாமா!

கவிஞ்சன் சொல்லைக்  கொண்டு வெல்லும் கவிதை புனைகிறான் 
பேச்சாளனோ பேச்சாற்றலால்  சபையில்  மதிக்கப்படுகின்றான் 
சொல்லாமல் சொன்ன சொல்லுக்கு  ஏதாவது விலையுண்டா 
வெல்லும்  சொல்லை  உடையவனுக்கு  பகைமை  உண்டா !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT