இன்னல் இழைக்காமல் இருந்ததில்லை
எந்தப் போரும்
ரத்த போதையில்
ரவுடித்தனம் செய்கின்றன
போரில் பெற்ற புகழெல்லாம்
அசோகரைச் சாட்சித் தேரில்
அழைத்து வந்து
போதிக்கிறது வரலாறு
போர் தீர்வாகாது என்று
விடுதலைத் தவத்தில்
வெற்றி கொண்டாடியது
காந்தியின் ஒருசொல்
அகிம்சை
கடைப்பிடியுங்கள்
காந்தியத்தை
நாடென்றாலும்
வீடென்றாலும்
அடங்கிப் போனது
வெள்ளைச் சிங்கம் அன்று
அகிம்சைப்புல் தின்று
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.