கவிதைமணி

வெல்லும் சொல்: ​சா. கா. பாரதி ராஜா

கவிதைமணி

தடைகளை உடைக்கும்
கரங்களைக் கோர்த்து
மேல்நோக்கி உயர்த்தும்
அதிகார முடிகளை
ஆட்டுவித்து அகற்றும்

வெல்லும் சொல்
முடியும்!
நெஞ்சில் நிறுத்துங்கள்
விடியும்!

நம்பிக்கை விதைகளை
நெஞ்சில் விதைத்து
உணர்வு உரத்தைத் தூவி
சாதிக்கும் எண்ண வெப்பத்தோடு
வளர்க்கும் சாதனையெனும் மரத்தில்
வெற்றியெனும் பூக்களை மலரவிடும்
ஒற்றைச் சொல்…
முடியும்!

கிரீடத்தின்மேல் அமரும்
மயிலிறகல்ல…
வடுக்களின்மேல் வருடும்
மயிலிறகு!

கலசமல்ல…
தாங்கி நிற்கும்
அடிவாரம்!
பூக்களல்ல…
உறுதியான வேராய்
வெல்லும் சொல்!

திசை திருப்பும்
எண்ணங்களை
தீயிட்டு பொசுக்கும்
அகத் தீ!
நாளை சுடர்விடும்
வெற்றி தீபமாய்!

அடியும் இடியும்
ஒடியும்!
தடியும் பிடியும்
உடையும்!
முடியும் படியும்!
முடியும் சொல்லால்
விடியும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT