கவிதைமணி

வெல்லும் சொல்: அழகூர். அருண். ஞானசேகரன்

கவிதைமணி
வெல்லும்சொல் பலவுண்டு, விவேகமும் அதிலொன்று;நல்விதமாய் இன்னதனை நாமுணர்ந்து--வல்லமையைமூலதனம் என்றாக்கி முன்னேற்றந் தனைகாண்போம்;சீலம்மிக்க வாழ்வுக்கே சிறப்பு!வெல்லும்சொல் இன்னதெனும் விளக்கமதைக் கொண்டிட்டுஅல்லும் பகலுமே அயராமல்--நல்வழியில்பாடுபட்டு உழைப்போர்க்கு பலன்கிட்டா திருந்திடுமோ?கேடுவரக் காண்பதெங் கே?நன்றான செயல்புரிய நாள்பார்க்கத் தேவையில்லை;உன்னதநல் வெற்றியே உனதாகும்,--என்றென்றும்,நல்லவர்க்கு எந்தவொரு நாளுமே நன்னாளாம்;வெல்லும்சொல் இன்னதென விளம்பு!வில்கொண்டு போராடி வெற்றிதனைக் காண்பதினும்சொல்கொண்டு போராடி சுமூகமாய்--நல்லதொரு,தீர்வுதனைக் காண்பதன்றோ தீர்கமுற்ற செயலாகும்?கூர்மதியர் செயலென்றே கூறு!மெய்யானத் திறனின்றி மேதினியை ஆளவந்தபொய்யனாம் மோடிதனைப் போற்றுவரோ?--செய்வேனெனசொல்வதனை முடிக்கத்தான் சூரனென்பார் மக்களெலாம்;வெல்லும்சொல் உண்டாமோ வேறு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT