கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: பொன். குமார் 

கவிதைமணி
நம்பிக்கை முழுவதுமாகஇழந்துவிடவில்லை. இன்னும் மிச்சமிருக்கிறது...புதிய பாதையில் போனாலும்பழைய பண்பாடு அழிந்து விடாமல்இன்னும் மிச்சமிருக்கிறது..காவிரி நீர்ப் பிரச்சனைகை நழுவிப் போனாலும்தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்தந்து விடுவார்கள்என்னும் எதிர்பார்ப்புஇன்னும் மிச்சமிருக்கிறது...எல்லோரும் காந்தி இல்லைஎன்றாலும்எல்லோரும் கோட்சே இல்லைஎன்னும்  எண்ணம்இன்னும் மிச்சமிருக்கிறது...மனிதர்களிடையேமனித நேயம்இன்னும் மிச்சமிருக்கிறது... எல்லாவற்றையும்இழந்து விட்டாலும்வாழ்ந்து விட வேண்டும் என்னும்வெறிஇன்னும் மிச்சருக்கிறது... மிச்சங்களை  மீட்போம்மிச்சமுள்ள வாழ்க்கையைமகிழ்வுடன் வாழ்வோம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT