கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: -ஆ. செந்தில் குமார்

கவிதைமணி
சுந்தரத் தாய்மொழியில் கற்பதற்கு மனமுண்டா…?சுரண்டிப்பிழைக்காது அரசியல் செய்வோர் எவருமுண்டா…?சுகம்பார்க்க காசுவாங்கா மருத்துவமனை ஏதுமுண்டா…?சுயவிளம்பரம் தேடாத மனிதரென்று யாருமுண்டா…?சுங்கவரிச் சாவடிகள் இல்லாத சாலையுண்டா…?சுற்றுப்புறத் தூய்மை சற்றேனும் இங்குண்டா…?சுற்றத்தைப் பேணுகின்ற மனப்பான்மை சிறிதுமுண்டா…?சுதந்திரம் கிடைத்தபின்னும் பேச்சுரிமை என்பதுண்டா…?வன்முறைகள் இல்லாத நாடென்பது ஒன்றுண்டா…?வகைப்பாடு இல்லாத மனிதகுலம் இங்குண்டா…?வசதியில்லா மாணவர்க்கு கல்விகற்கும் வாய்ப்புண்டா…?விளைநிலங்கள் மனையாகா நிலையேதும் வருவதுண்டா…?முதியோர் இல்லங்கள் முளைக்காத நிலையுண்டா…?மதுவிற்கு அடிமையாகா தலைமுறையும் இங்குண்டா…?மண்வளங்கள் காப்பதற்குத் திட்டங்கள் ஏதுமுண்டா…?மனதிற்கு இதமான சூழ்நிலைகள் மெத்தவுண்டா…?நலத்திட்டம் எல்லாமே உரியவரை அடைவதுண்டா…?நெளிவுசுளிவு தெரியாதோர் வாழ்வதற்கு வாய்ப்புண்டா…? - நமைச்சூழ்ந்த நல்லனவெல்லாமே இவற்றுள் தப்பிப்பிழைத்த மிச்சங்கள்…நல்வாழ்வு வாழ்ந்திடவே இம்மிச்சங்களை மீடடெடுப்போம்…!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT