கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

கவிதைமணி
வேலங்குச்சிகள் செய்த வேலை-இப்பொழுது சில களிம்புகள்,  பற்களின் விளிம்புகளில்செய்து கொண்டிருக்கின்றன—அன்று திண்ணைப்பள்ளிகள்வித்தையின் விந்தைகள்,இன்றோ கல்விக்கடைகள் பலமுதலீடு செய்யும் பங்குச்சந்தைகள் –காற்றிலிருந்துகாணாமல் போனது  நீர் சத்து .ஒரு ஈரமில்லா மனிதமனங்களைப்போல்உலர்ந்து வருகிறது --வாழ்க்கை மரங்களில்எங்கே க்ளோரோபில் ?பசுமைக்காதல் இல்லாதவரட்டுத் திருமண உறவுகள் --தாய்ப்பாலாய் ஒரு கார்பன் –அந்த எரிபொருள்தாங்கிப்பிடித்து எரிய வைக்க வேண்டுமேவாழ்க்கை விளக்கை ?“வெளிச்சம்” “சூடு”இரண்டுமின்றி ஒரு சூரியன்--அப்படிதான், தொழிலில் “நாணயமும்  நியாயமும்” ..இவற்றை கடத்தியது யார் ??பேராசை அரக்கனோ ?பசு வளர்த்துபயிர் செழித்த பூமி –பூனை வளர்த்தோம்புதைக்குள் விழுந்ததுநாமா ? நம் நிலமா ??நமக்குள் பாரதப் பண்பாடுசீராகத்தான் ஓடிக்கொண்டிருந்தது-இந்த ரயிலை தடம் மாற்றியது யார் ?நிற்கட்டும்தோல் தான் உரிந்துள்ளது-மரபணு மாறவில்லை..இனியாவதுஇந்தியப்பெண்களின்கருப்பைகளில் கலாசாரத்தைகருத்தரிக்க வைப்போம் –புறப்படு –  மிச்சத்தை மீட்க புறப்படு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT