கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: சரஸ்வதி ராசேந்திரன் 

கவிதைமணி

விளை நிலத்தை விலை நிலமாக்கியாச்சு
விவசாயத்தை ஒழித்துக் கட்டியாச்சு
தனியார் மயம்  ஊர்கள் மயம்
தாராளமயம்  உலக மயம்னு வந்தாச்சு
பாரம்பரிய பண்புகளை ஓரம் கட்டியாச்சு

துரித உணவுகளை கொண்டு வந்தாச்சு
காவிரி  பொய்த்துப் போயாச்சு
மரங்களை வெட்டியாச்சு
மணலை அள்ளியாச்சு
மரபணு காய்கறிகள் வந்தாச்சு
குழந்தையை தாய் பெத்து செவிலியர் வளர்க்கும்
கலாச்சாரமும் கணிசமா வந்தாச்சு
மருத்துவமும் பொறியலும் காசுக்கு வித்தாச்சு
மனிதாபி மானமும் மரித்துப் போயாச்சு
வல்லரசு ஆகுதோ இல்லையோ நாடு

வலிமையான ஊழல் மயமாச்சு எல்லாமே
உச்சத்துக்குப் போனபின்பு இங்கே
மிச்சமென்ன இருக்குது எச்சத்தைத்தவிர
மச்சமுள்ளவனே மலிந்து (அரசியல் வாதிகள்)
நிற்கையில்
சொச்சம் மிச்சமுள்ள 
மானத்தையாவது மீட்போம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT