முகப்பு
கவிதைமணி

ஒருமுறையேனும்: ஆ.செந்தில் குமார்

Updated On : 25 ஜூன், 2018 at 5:29 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM

மனித ரெல்லாம் அழகானவர்தான் 
ஒருமுறை அவர்தம்
மறு முகத்தை உணராத வரை…!

ஆபத்து கூட அழகானதுதான்
ஒருமுறை நாம் 
அதன் அருகே செல்லாத வரை…!

அச்சம் என்பது நிரந்தரந்தான்: 
ஒரு முறை நாம் 
அதை நேருக்கு நேர் சந்திக்காத வரை…!

அறியாமை என்பது நிரந்தரந்தான் 
ஒரு முறை நாம்
ஆக்கத்தோடு சிந்திக்காத வரை…!

அடிமைத் தளைகள் நிரந்தரந்தான் 
ஒரு முறையேனும் நாம்
அதற்கெதிராய் கிளர்ச்சிகள் செய்யாத வரை…!

அயல்மொழி ஆதிக்கம் நிரந்தரந்தான் - 
ஒரு முறை நம்
அன்னை மொழியின் சிறப்பை உணராத வரை…!

அன்பும் கூட எட்டாக்கனிதான் 
ஒரு முறையேனும் நாம்
அதை எவரிடத்தும் செலுத்தாத வரை…!

Advertisement

நாட்டிற்கு வளர்ச்சி இன்றியமையாததுதான் 
ஒரு முறையேனும்
நாமதன் வளங்களைக் குலைக்காத வரை…!

எத்தகு செயலும் நற்பயன் தருமா?  
ஒரு முறையேனும் நாம்
எதிர் விளைவுகளைச் சிந்திக்காத வரை…!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.