ஒருமுறையேனும்: ப.க.நடராசன்
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
அறியாமையினால் இழந்தேன் கிடைத்த
அரிய வாய்ப்பினை..
அடுத்து அமைந்தால்
அரியணை அமைப்பேன்
ஆரவாரம் இல்லாமல்..
இதழ்கள் இசைக்கின்றன
இயல்பாய் வரிகள்..
Advertisement
தமிழ் ஈகையாய்
வாரி வழங்குகின்றன
சொற்களை கோர்வையாக..
உலகில் உரிய வழியில் உன்னதம் பெற
வாய்ப்பினை ..
ஒருமுறையேனும்
எதிர்பார்த்து...
ஊர் நலம் பெற
எழுத்துக்கள்
என் எழுத்துக்கள்
ஏணியாய் அமையும்
ஐயம் இன்றி
சொல்வேன்
வாய்ப்பே
ஒருமுறையேனும்
வந்துவிடு..