ஒருமுறையேனும்: ப.வீரக்குமார்
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
பித்தந் தெளிந்து
சத்தம் மறந்து
சங்கடங் குறைத்து
சிம்புட் பறவையாய்
சிறகை விரித்து;
அகண்ட புவியில்
ஆனந்தம் மணக்க
ஆசை சுரப்பியைத்
தூண்டிய செய்து;
மேகத்துக்குள்
போதனைகள் கரைத்து;
பால் வெளியில்
பாங்கோடு சுற்றி;
Advertisement
பண்பட்ட மனங் கொண்டு
புண் தரும் வழிதடுத்து;
ஏகாந்தப் பொருளை
ஓங்காரத்தில் நிறுத்தி
ஓசை கூட்டி
வென்றேன் வென்றேன்;
வாழ்வின்
இன்பத்துள் நுழைந்து
சொர்க்கத்தின்
வாசல் கடந்து
தேவருடன் கலந்து
செறிவுற்ற சித்தத்தில்
மயங்கிடும் நிலை
என்றாவது
ஒரு நாள்