முகப்பு
கவிதைமணி

ஒருமுறையேனும்:  பேராசிரியை செ. சுதா ராமு 

Updated On : 25 ஜூன், 2018 at 5:23 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM

வறண்டு கிடக்கும் 
ஆற்றுப்படுகைகளில்
வளமாக நதிநீர் பாய்ந்து
மண் குளிர்வதை
கண் குளிர காணவேண்டும்
ஒரு முறையேனும்! 
சேற்றில் கால் வைத்து 
சோற்றில் கைவைக்க முடியாமல் 
மாண்டு போகும் 
உழவர்களின் வாழ்வில் 
வறுமை நீங்கி 
உலகின் முதல் பக்கம் 
உழவேதெய்வமென்று 
பறை சாற்றி மகிழ்வதை 
காண வேண்டும் 
ஒரு முறையாவது!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.