ஒருமுறையேனும்: பொன். குமார்
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
ஒருமுறையேனும்குறைந்தபட்சம் நகராட்சி உறுப்பினராகிவிடும்நப்பாசையில்அரசியலில் ஈடுபட்டு வருகிறான்அரசியல்வாதி. ஒருமுறையேனும்இமயமலை ஏறிடவேண்டுமெனதீவிர இலட்சியத்துடன்இயங்கிக் கொண்டுள்ளான்மலையேற்ற வீரன். ஒருமுறையேனும்சுதந்திர காற்றைச் சுவாத்திடஏங்கிக் கொண்டுள்ளான்இலங்கைத் தமிழன். ஒரு முறையேனும்கடவுளைக் கண்டுவிட வழிபட்டுக்கொண்டுள்ளான்பக்தன். ஒருமுறையேனும் சேரிக்குள் தேர் வரவேண்டுமென்றுபோராடிக்கொண்டுள்ளான்தலித். ஒருமுறையேனும்தமிழ்நாட்டைதமிழன் ஆளவேண்டுமென்றுதவமிருக்கிறான்தமிழன். ஒரு முறையேனும்..... ஒருமுறையேனும்மனிதராக வாழ்ந்து மரணிக்க வில்லை எவரும்....