ஒரு முறையேனும்: சசி எழில்மணி
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
உயரம் சென்ற மனிதா நீ
வந்த வழி மறக்கலாமோ
கடந்து வந்த பாதை மறந்து
மதம் பிடித்து நடக்கலாமோ
இல்லாத நேரத்தில்
நீ பட்ட துன்பங்கள்
எல்லாம் வந்ததும்
பழையதை மறந்தாயோ
மறந்தால் வாழ்க்கை
இனிதாய் அமையுமோ
நினைத்தால் வாழ்க்கை
பாழாகிப் போகுமோ
Advertisement
வாழ்க்கையைத் திரும்பிப்பார்
இருக்கின்ற நேரத்தில்
நீ தந்து மகிழ்ந்திடு
உலகம் உன்னை கவனிக்கும்
ஒரு முறையேனும்.