கவிதைமணி

யார் இட்ட சாபம்: கோ. மன்றவாணன்

கவிதைமணி
சீர்இட்ட செய்யுள் போலச்     செப்பமாய் மிளிர்ந்த என்னைப்போர்இட்ட களமாய் மாற்றிப்     போட்டது எதனால்? யாரால்?நீர்இட்ட நெருப்பு அணைந்து     நீறென மாறல் போலயார்இட்ட சாபத் தாலே     என்வாழ்க்கை சாம்பல் ஆச்சு?நல்லதை விரும்பிச் செய்தேன்     நாடிது மதிக்க வில்லைஉள்ளதை உரைத்து வைத்தேன்     உலகிது நம்ப வில்லைகல்லதை வைரம் என்பார்     கருமையை வெண்மை என்பார்சொல்லதை மாற்றிப் பேசும்     சூழ்ச்சியர் வெல்லு கின்றார்சட்டத்தைக் கற்றேன்; நீதி     சபையினில் நேர்மை இல்லைபட்டத்தைப் பெற்றேன்; எங்கும்     பணியது கிடைக்க வில்லைவிட்டத்தைப் பார்த்துப் பார்த்து     வெறுங்கனா காணு கின்றேன்திட்டத்தை யார்தான் சொல்வார்     தேசத்தில் அறங்கள் வெல்ல?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT