கவிதைமணி

யார் இட்ட சாபம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

கவிதைமணி
அம்புகுறி   மாறிப்போய்   தைத்த  தாலே            அரும்புதல்வன்  தனையிழந்த  முனிவ  ராலேதம்மகனைப்  பிரிந்துமன்னன்   தசர  தன்தான்            தவித்திட்டான்  இறந்திட்டான்  சாபத்  தாலே !அம்மம்மா  அகலிகைதன்  அழகைக்  கண்டே            அடங்காத  காமத்தால்   இந்தி  ரன்தான்தம்முடைய   உடல்முழுதும்   குறிகள்  பெற்றான்            தவமுனிவர்  கவுதமன்தன்  சாபத்  தாலே !விருந்தாக  வந்ததன்னைக்  கவனிக்  காமல்            வீற்றிருந்த  சகுந்தலைக்குத்  தூர்வா  சர்தாம்அருங்காதல்  கணவனவன்  மறப்பா  னென்றே            அளித்திட்ட  சாபத்தால்   அவதி  யுற்றாள் !பெருமைமிகு  வித்தையினைக்  கற்ப  தற்கே            பெயர்மாற்றிப்  பொய்சொன்ன   கார  ணத்தால்அரும்வித்தை   தனைமறப்பாய்   என்று  சாபம்            அளித்திட்டார்  பரசுராமன்  மறந்தான்  கர்ணன் !நெல்லையப்பர்  அருங்கோயில் ;  கருவூர்  சித்தர்            நெஞ்சமிட்ட  சாபத்தால்  அழிந்த  போலஎல்லாமும்  இங்கிருந்தும்  தமிழ  நாடோ            எவருமில்லா   ஏதிலியாய்  ஆன  தேனோ !நல்லவர்கள்  முடங்குவதும்  கயவ  ரெல்லாம்            நாடாள  வருவதெல்லாம்  எவர்சா  பத்தால்வல்லவராய்  இளைஞரெல்லாம்  எழுந்தால்  போதும்            வளமாகும்  சாபமெல்லாம்  பொடியாய்ப்  போகும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT