முகப்பு
கவிதைமணி

யார் இட்ட சாபம்: ஆபிரகாம் வேளாங்கண்ணி 

Updated On : 21 மே, 2018 at 3:03 PM
பகிர்:

யார் இட்ட சாபமோ யாருக்கு
யார் மீது கோபமோ இல்லை
முன்னோர் செய்த பாவமோ

மனதறிந்து எந்த ஒரு பாவமும்
செய்ததாய் நினைவில்லை 
எனக்கு மட்டுமேன் தீராதத் தொல்லை 

வீண்பழி யென்மீது சுமத்தியதால் 
நான் வணங்கும் தெய்வத்தின் முன் 
மண்ணை வாரி வைத்து விட்டு 

Advertisement

தவறு என்மீது எனில் என் தாலி 
அறுபட்டு போகட்டும் இல்லையேல்
என்மீது பழி போட்டவர் தாலியை

எண்ணி எட்டோடு எட்டு நாளுக்குள்
அறுபட வதைக் கண்ணால் காணும் வரை 
எந்தன் மனம் ஆறவேயாறாது 
கங்கணம் கட்டிக்கொண்டு நின்றேன் 

எட்டாம் நாள் என் தாலியே அறுபட்டு
சீமாட்டி யென்றெனை பாராட்டிய நா
கம்மனாட்டி யெனவழைக்க ஆளாகி
விட்ட பொம்மனாட்டியாய் நின்றேன் 

சொல்புத்தி சுயபுத்தியை கொன்றிட
வருந்தி பின் உணரலானேன் என்
கண்கள் கெட்டப்பின் சூரியனை
நமஸ்கரிக்க யாருக் கென்ன லாபம்

யார் இட்ட சாபம் வேறு யாருமில்லை 
எனக்கு நானே இட்டுக் கொண்டு விட்ட
சாபமே யன்றி வேறு யாராலும் இல்லை 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.