முகப்பு
தமிழ்நாடு

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும்!

சென்னை, வேலூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிப்பு.

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும். - படம்: ஏஎன்ஐ
பகிர்:

சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்டங்கள் மற்றும் வேலூரில் மே 5 வரை கடும் வெப்ப நிலை நிலவும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கோடை வெய்யிலின் தாக்கம் நடப்பு ஆண்டு அதிக அளவு உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக வெய்யில் 100 டிகிரியை தாண்டி வருகிறது.

இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது.

Advertisement

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நிலவும் வெப்பநிலை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீன் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”பல நாள்கள் இடைவெளிக்குப் பிறகு, கரூர், தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் தீவிர இடியுடன் கூடிய மழை பதிவாகியுள்ளது. உள் தமிழகம், தெற்கு மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் மேலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், – 42.4°C : இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை

சென்னை மீனம்பாக்கம் – 40.2°C : இந்த ஆண்டின் முதல் 40°C+ பதிவு

சென்னை நுங்கம்பாக்கம் – 38°C : இந்த ஆண்டின் அதிகபட்சம்

திருத்தணி – 40.6°C : இந்த ஆண்டின் அதிகபட்சம்

அடுத்த 5 நாள்கள் (மே 5 வரை), வேலூரிலிருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் வரை கடும் வெப்பம் நிலவும். அதன் பிறகு வெப்பநிலை குறையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Tamil Nadu Weatherman Pradeep John has stated that severe heat conditions will prevail in Chennai, its suburban districts, and Vellore until May 5.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.