முகப்பு
கவிதைமணி

யார் இட்ட சாபம்: பேராசிரியர் கவிஞர் பு மகேந்திரன்

Updated On : 21 மே, 2018 at 3:51 PM
பகிர்:

நாடு போற
போக்கைப் பாத்தா
எனக்குப் பிடிக்கல
நாணயமானவங்க
என்ன தான் ஆனாங்க

கூட்டம் போட்டு மனச ஏமாத்தி
ஓட்டு வாங்கிறாங்க
ஜெயிச்ச பின்ன என்ன ஆனாங்க
சாலையோரம் பாதையிலே
பிச்சை எடுக்கிறாங்க
கோயிலிலே நின்னு
கூப்பாடு போடுறாங்க

கைய காலாக்கி காசாக்கிறாங்க
தீமையே நாதமாக சுவாசிக்கிறாங்க
பாவத்தையே கண்ணாகப் பாவிக்கிறாங்க
யார் இட்ட சாபம்

Advertisement

யார் பெற்ற வரம் இது
தாங்குமா இந்த பூஉலகம்
மலையை குளமாக்குகிறான்
குளத்தை வீடாக்குகிறான்
நிலத்தை அபார்மெண்டாக்குகிறான்
யாரிட்ட சாபம்

பணக்குமியல் அதில் தூங்குகிறான்
பணத்தால் பாசத்தை மறக்கின்றான்
தாயினை முதியோர் இல்லத்தில்
சேர்க்கின்றான்
யாரிட்ட சாபம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.