முகப்பு
கவிதைமணி

மீண்டும் வருவாயா..?

கொஞ்சும் தமிழில் கவியெழவே……………கவிதைக் காதல் தந்தாயே..!

Updated On : 12 பிப்ரவரி 2020, 1:46 pm IST
பகிர்:

கொஞ்சும் தமிழில் கவியெழவே

……………கவிதைக் காதல் தந்தாயே..!

பிஞ்சுக் குழந்தை அழும்படியே

Advertisement

Advertisement

……………பிரிந்து சென்றாய் எங்கேயோ..?

தஞ்சம் என்றே வந்தவரைத்

……………தவிக்க விட்டுச் சென்றாயோ..!

நெஞ்சைத் தொட்டக் கவிதைமணி

……………நீண்ட நாளாய்க் காணோமே..?

.

தன்னை மறந்து பாட்டெழுத

……………தமிழில் தலைப்பும் கொடுத்தாயே..!

தென்றல் கவிதைத் தினம்தினமே

……………தந்து விட்டுச் சென்றாயே..!

என்போல் பலரும் ஏங்குகின்றார்

……………எப்போ மீண்டும் வருவாயோ..?

மன்னன் மகுடம் கவிதைமணி

……………மீண்டும் சிரம்மேல் சூடுவாயா..!

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.