கவிதைமணி

மீண்டும் வருவாயா..?

கொஞ்சும் தமிழில் கவியெழவே……………கவிதைக் காதல் தந்தாயே..!

கவிதைமணி

கொஞ்சும் தமிழில் கவியெழவே

……………கவிதைக் காதல் தந்தாயே..!

பிஞ்சுக் குழந்தை அழும்படியே

……………பிரிந்து சென்றாய் எங்கேயோ..?

தஞ்சம் என்றே வந்தவரைத்

……………தவிக்க விட்டுச் சென்றாயோ..!

நெஞ்சைத் தொட்டக் கவிதைமணி

……………நீண்ட நாளாய்க் காணோமே..?

.

தன்னை மறந்து பாட்டெழுத

……………தமிழில் தலைப்பும் கொடுத்தாயே..!

தென்றல் கவிதைத் தினம்தினமே

……………தந்து விட்டுச் சென்றாயே..!

என்போல் பலரும் ஏங்குகின்றார்

……………எப்போ மீண்டும் வருவாயோ..?

மன்னன் மகுடம் கவிதைமணி

……………மீண்டும் சிரம்மேல் சூடுவாயா..!

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT