நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 8

நீ வெண்ணெய் உண்டது எதற்காக?

செ.குளோரியான்

உண்டாய் உலகுஏழ் முன்னமே, உமிழ்ந்து, மாயையால்
                                                                                          புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை
                                                                               நிலைஎய்தி,
மண்தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும்
                                                                         பீர்சிறிதும்
அண்டாவண்ணம் மண்கரைய நெய்ஊண் மருந்தோ
                                                                      மாயோனே?

எம்பெருமானே, மாயோனே,

முன்பு ஏழு உலகங்களையும் உண்டாய், உமிழ்ந்தாய், அதன்பிறகு, மாயையினால் இவ்வுலகுக்கு வந்தாய், சிறிய மனிதர்களின் தாழ்வான உடலை ஏற்றுக்கொண்டாய், கண்ணனாக வெண்ணெய் உண்டாய்.

நீ வெண்ணெய் உண்டது எதற்காக? முன்பு உலகங்களை உண்டபோது உன் வயிற்றில் மண் தங்கிவிட்டதோ? அது சோகையை உண்டாக்கியதோ? அந்த மாந்தத்துக்கு மருந்தாக, அந்த மண் கரைவதற்காக நெய்யை உண்டாயோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT