நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 9

இறைவன் இல்லை என்கிறார்கள்,

செ.குளோரியான்

உளன்எனில் உளன், அவன் உருவம் இவ் உருவுகள்,
உளன்அலன்எனில் அவன் அருவம் இவ் அருவுகள்,
உளன்என இலன்என இவைகுணம் உடைமையில்
உளன், இரு தகைமையொடு ஒழிவுஇலன் பரந்தே.

சிலர், இறைவன் இருக்கிறான் என்கிறார்கள், அப்போது அவன் நிஜமாகவே இருக்கிறான், இவ்வுலகில் உருவத்தோடு இருக்கும் அனைத்துப்பொருள்களும் அவனே ஆவான்,

வேறு சிலர், இறைவன் இல்லை என்கிறார்கள், அப்போதும் அவன் இருக்கிறான், உருவம் இல்லாத பொருள்கள் எல்லாவற்றிலும் அவனே நுட்பமாகத் திகழ்கிறான்,

இவ்வாறு, உள்ளவன், இல்லாதவன் என்கிற இரு குணங்களும் எம்பெருமானுக்கு உண்டு, இந்த இரு தன்மைகளோடு உருவம், அருவம் என அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளான் அவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT