நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து நான்காம் திருவாய்மொழி - 4

நல்ல நீலநிறம்கொண்ட மகன்றில் பறவைகளே

செ.குளோரியான்

என்நீர்மை கண்டு இரங்கி, இது தகாது என்னாத
என் நீலமுகில்வண்ணர்க்கு என்சொல்லி யான் சொல்லுகேனோ,
நல்நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒருவாய்ச்சொல்
நல்நீல மகன்றில்காள்! நல்குதிரோ? நல்கீரோ?

என் நிலைமையைக் கண்டு மனம் இரங்கி, 'இவளைப் பிரிந்திருப்பது தகாது' என்று எம்பெருமான் எண்ணவில்லை. அந்த நீலமுகில்வண்ணனுக்கு நான் என்ன சொல்வேன்?

நல்ல நீலநிறம்கொண்ட மகன்றில் பறவைகளே, எம்பெருமானிடம் சென்று, 'இனியும் தங்களைப் பிரிந்திருந்தால் அவளுடைய நல்ல உயிர் அவளிடம் தங்காது' என்று சொல்வீர்களா? சொல்லமாட்டீர்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT