நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 83

மல்லர்களோடு போரிட்டு அவர்களுடைய

செ.குளோரியான்

அயர்ப்பாய், அயராப்பாய் நெஞ்சமே, சொன்னேன்
உயப்போம் நெறிஇதுவே கண்டாய், செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே, அஞ்சினேன்,
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.

நெஞ்சமே,

நீ செய்யக்கூடாதவற்றையே செய்வாய் என்று எனக்கு அச்சமாக இருக்கிறது,

மல்லர்களோடு போரிட்டு அவர்களுடைய வாழ்நாளை முடித்தவன் எம்பெருமான், அவனையே நீ எந்நேரமும் வாழ்த்திக்கொண்டிரு, நீ உய்வதற்கான வழி இதுதான்,

நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன், இனி கேட்பதும் விடுவதும் உன் விருப்பம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT