நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 84

திருவடிகளில் பூக்களைப் போட்டு,

செ.குளோரியான்

வாழ்த்தி அவன்அடியைப் பூப்புனைந்து, நின்தலையைத்
தாழ்த்து இருகை கூப்புஎன்றால் கூப்பாது, பாழ்த்தவிதி,
எங்குஉற்றாய் என்றுஅவனை ஏத்தாது, என்நெஞ்சமே,
தங்கத்தான் ஆமேலும் தங்கு.

பாழும் விதியைக்கொண்ட என் நெஞ்சமே,

எம்பெருமானை வாழ்த்து, அவனுடைய திருவடிகளில் பூக்களைப் போட்டு, உன்னுடைய தலையைத் தாழ்த்தி, இரு கைகளையும் குவித்து வணங்கு என்றால், நீ வணங்க மறுக்கிறாய்,

இனிமேலாவது நீ எம்பெருமானை வணங்கி, 'எங்கே இருக்கிறாய் ஐயா' என்று தேடித் துதிப்பாயாக, அப்படிச் செய்யாமல் இருப்பதுதான் உன் விருப்பம் என்றால் அப்படியே இருந்துவிடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT