நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 86

எம்பெருமான் கார்மேகத்தின் வண்ணத்தை

செ.குளோரியான்

கார்கலந்த மேனியான், கைகலந்த ஆழியான்,
பார்கலந்த வல்வயிற்றான், பாம்புஅணையான், சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை
என்நினைந்து போக்குவர் இப்போது?

எம்பெருமான் கார்மேகத்தின் வண்ணத்தைக்கொண்ட திருமேனியுள்ளவன், கையில் சக்ராயுதத்தை ஏந்தியவன், உலகையே உண்ட வலிமையான வயிற்றைக் கொண்டவன், பாம்புப் படுக்கையில் கண்வளர்கிறவன்,

அத்தகைய பெருமானின் பெருமைகளைச் சொல்லும் சொற்களை நினைத்தால், சூழ்ந்துவருகிற வினையால் ஏற்படும் மிகுந்த துன்பம் போகும், அவ்வாறு தங்கள் துன்பத்தைப் போக்கிக்கொள்ளாதவர்கள் வேறு எதையெண்ணி நேரத்தைப் போக்குவார்கள்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT