'கள்வா, எம்மையும் ஏழுஉலகும் நின்
உள்ளே தோற்றிய இறைவ!' என்று
வெள்ஏறன், நான்முகன், இந்திரன், வானவர்
புள்ஊர்தி கழல்பணிந்து ஏத்துவரே.
வெள்ளை நிற இடபத்தைத் தனக்கு வாகனமாகக்கொண்ட சிவபெருமான், பிரம்மன், இந்திரன், தேவர்கள் என அனைவரும் எம்பெருமானை வணங்குவார்கள், கருடனை வாகனமாகக்கொண்ட அவனுடைய திருவடிகளில் பணிந்து, 'கள்வனே, எங்களையும் ஏழு உலகங்களையும் உனக்குள் தோற்றுவித்த இறைவனே' எனப் போற்றுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.